×

வில்லியாக நடிக்கும் அஞ்சனா?

வெளிநாடு செல்லும் விமானத்தில் ஏர்-ஹோஸ்டஸ் பணியில் ஈடுபட்டிருந்த அஞ்சனா கீர்த்தி, சினிமா ஆசை காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, துபாயில் இருந்து சென்னைக்கு வந்தார். தனது அம்மா மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பதால், நடிப்பு ஆர்வம் தனக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை என்று சொன்ன அவர், தமிழில் அழகிய பாண்டிபுரம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து திறந்திடு சீசே, அந்தாதி, ஜம்புலிங்கம் 3டி, சென்னை 28ன் 2ம் பாகம், யாகன், ஆர்.கே நகர் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். இதில் அவர் வில்லி கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களான நிலையில், திடீரென்று கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. நிலமை சரியான பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும். அதுவரை என் கேரக்டர் என்ன? வில்லியா, நல்லவளா என்று சொல்ல முடியாது’ என்றார்.

Tags : Anjana ,villain ,
× RELATED பெண்ணிடம் சங்கிலி பறிப்பு